கடல் கடந்து நீ சென்றாலும் ,
என் கடலிலும் நீ மிதக்கிராய்...
எந்திரம் கற்பதை நீ கற்க செல்லின் ,
என் செல்கள் எதையோ கற்று என் செல்வத்தை தயாரிக்கின்றன...
அமேரிக்கா நீ செல்ல ,
அம்மா என்று உள்ளே சொல்ல...
என் இரவு உன் பகல், உன்னிரவு என் பகல்,
எனக்குள் ஒரு முழு இரவும் நமதின் பகல்...
இந்த பூ உலக வெற்றியை நீ கண்டு வா...
ஒரு பூவின் உலக வெற்றியாய் நானிருப்பேன்...
இலக்கை மட்டுமே நோக்கி நீ ஓடு...
இலகிய உயிருக்கு நான் பாடுகிறேன்...
உடலிலே நான் சுமந்தாலும்...
உள்ளத்திலே நீ சுமக்கிறாய்...
ஏக்கத்துடன் நாளைய தினத்திற்காக
நாள் பார்த்துக் கொண்டிருக்க ,
ராமனின் சீதையுமல்ல ,
துஷ்யதனின் சகுந்தலையமல்ல
ப்ரேம(முள்ள),
நந்தினி
[ Pregnant Wife wishes Husband on a Journey for Higher Studies Overseas ]

No comments:
Post a Comment