குழந்தை வேண்டுபவள் அன்னை..
கொடுப்பது தெய்வம்..
பத்து மாதங்கள் தவம்..
கிடைத்து விட்டது வரம்..
தெய்வம் தங்குமிடம் ஹ்ருதயம்..
துடித்தால் தான் உயிர்..
ஹ்ருதயம் அந்த ஹரி ஆடும் தாயம் அல்லவா ???
தான் பெற்ற ஒரு பிஞ்சு நெஞ்சம் துடிக்கவில்லை என்றால் பதறுபவள் தாய்..
ஓராயிரம் நெஞ்சத் துடிப்பை பார்க்க ஓடுபவள் யார் ???
தெய்வத்தின் இருப்பிடத்தை சரிபார்ப்பவள் யார் ???
உயிரின் சத்தத்தை ஊடுருவி கேட்ப்பவள் யார் ???
ஹ்ருதயனி என்று பெயரிட வேண்டியவளை
ஹரினி என்று பெயரிட்டனர்...
Happy birthday Harini
பின்குறிப்பு : எனது அக்கா ஹரினியின் பிறந்த நாளுக்கு இது சமர்ப்பணம் .
அவள் எதிரொலி மருத்துவ தொழில்நுட்பத்தை பிறந்த குழந்தைகளின் இருதயத்தில் செலுத்தி அதன் வளர்ச்சியையும் செயல்திறனையும் கணிக்கிறாள்.
PS : This write up was my present to My cousin sister Harini for her birthday.
She works as a Senior Echo technician and conducts echo cardiography tests for just born to 5 day old kids daily.

No comments:
Post a Comment